வவுனியா மதவுவைத்தகுளத்தில் மோட்டார் சைக்கில் விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!

552

 
வவுனியா மதவுவைத்தகுளத்தில் இன்று (27.10.2017) காலை 10 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில்- கார் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து கண்டி வீதியூடாக மதவாச்சி நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிலின் பின்புறமாக அதே பாதையில் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டர் சைக்கிலில் பயணித்த சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.