இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக கடினப்பந்து கிரிக்கெட் போட்டியில் நேற்று 26 வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தை எதிர்த்து ஆடிய வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் இன்னிங்ஸ் மற்றும் 214 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் இருவர் சதம் பெற்று அணியைப் பலப்படுதினர்.
முதல் இனிங்ஸில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம் 49 -10 ஓட்டங்களை பெற்றிருந்தது. அ. ஜசித்தகன் 3 இலக்குகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் முதல் இன்னிங்ஸில் 314 – 3 ஓட்டங்களை பெற்றிருந்தது. பெ ச. சுலைக்சன் 111 ( ஆட்டமிழக்காது) ச. அலைக்சன் 107, இரண்டாவது இன்னிங்ஸ் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம் 50 – 10 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்திருந்தது. அ . ஜசித்தகஜன் 4 இலக்குகள், வி. அபிநயன் 3 இலக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.










