சட்டவிரோதமான முறையில் வயிற்றில் மறைத்து வைத்து தங்கம் கடத்திச் சென்ற இலங்கையர்கள் இருவர் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வைத்து கைத்து செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து ஸ்ரீலங்க விமான சேவைக்கு சொந்தமான UL-159 என்ற விமானத்தில் சென்ற ஷரீஃபீடன் மஹ்மத் மஹ்ரூப் என்ற நபர் கைது செய்யட்டிருந்தார்.
இவர் இரண்டு தங்க பிஸ்கட்டுகள் விழுங்கியிருப்தை ஒப்புக்கொண்டதையடுத்து கிங் ஜோர்ஜ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மூலமாக தங்கம் வெளியேற்றப்பட்டிருந்தது.
இதேவேளை, ஹஜிரா உமா ஜீனூப் அபேடன் என்ற நபர் சட்டவிரோதமான முறையில் 88 கிராம் தங்க நகை கொண்டு சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் சந்தைப் பெறுமதி 241,807 (இந்திய ரூபாய்) ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






