தற்கொலை செய்யும் முன் மாணவனின் கண்ணீர் வாக்குமூலம்!!

691

சென்னையில் கவின் கலைக்கல்லூரி மாணவன் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது அரசு கவின் கலைக்கல்லூரி, இங்கு பி.எப்.ஏ துறையில் இறுதி ஆண்டு பயின்று வந்த மாணவர் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டார்.

தனது சாவுக்கு காரணம் துறைத்தலைவர் தான் என அவர் கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு, வேலூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் பிரகாஷ் பதிவு செய்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில், இன்னொரு மதத்தினை பின்பற்றுவது தவறு என துறைத்தலைவர் கூறியதாகவும், எந்த வேலையும் செய்ய விடாமல் மன உளைச்சல் கொடுத்ததால் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே நேற்று கல்லூரி மாணவர்கள் துறைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.