தன்னைத்தானே கத்தியால் கீறிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அகதியின் நிலை!!

707

மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தன்னைத்தானே கத்தியால் கீறிக்கொண்டு நேற்று (28.10) போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த இலங்கை அகதி அஜாய் (24) தாய் தந்தையை இழந்து கடந்த 2015இல் தமிழகத்திற்கு சென்றுள்ளார். தமிழகம் சென்றவர், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப் பட்டுள்ளார். பின்னர் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைமறைவானார்.

இந்த நிலையில், நேற்று தன்னை முகாமில் அனுமதிக்க வேண்டும் என வழியுறுத்தி கை,கால் வயிற்றுப்பகுதிகளில் தன்னைத்தானே கத்தியால் கீறிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த அகதியை பொலிஸார் ராமநாதபுரம் அரச மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.