கணவரின் சகோதரரால் கொடுமைக்கு ஆளான பெண் : கண்ணீர் மல்க பேட்டி!!

281

புது டெல்லியில் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் தனது மைத்துனரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதினைந்து வயதில் திருமணம் ஆனபோது குறித்த பெண் தனது மாமனார், மாமியாரால் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

பின்னர் தனது மைத்துனரை திருமணம் செய்து கொண்ட தனது மூத்த சகோதரியும் அதே வீட்டில் அவர்களுடன் சேர்ந்து கொண்டு தன்னை துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஒரு குழந்தைக்கு தாயான பின்பும் தன் மைத்துனர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், தனது கணவரும் தன்னை சித்ரவதை செய்வதாகவும் குறித்த பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.