24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் பலி : நடந்தது என்ன?

313

குஜராத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 5 குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறந்துள்ளன. இதே போன்று மற்றொரு அரசு மருத்துவமனையிலும் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.

அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், இந்த 9 குழந்தைகளும் உயிரழந்துவிட்டன. 24 மணி நேரத்தில், 9 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரழந்த இந்த துயர சம்பவம பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.