வவுனியா ஒமந்தையில் வாகன விபத்து : 24 பேர் படுகாயம்!!

455

 
வவுனியா ஒமந்தை பகுதியில் இன்று (30.10.2017) காலை 6 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா ஒமந்தை பனிக்கர்நீராவி பகுதியில் புளியங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேரூந்து வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பால் கொள்கலன் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பேரூந்தில் பயணித்த 24 ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.