வவுனியாவில் ஆசிரியரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!!

560

 
வவுனியா கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியால மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து ஆசிரியரை இடமாற்ற வேண்டாமென எதிர்ப்பு தெரிவித்து இன்று (30.10.2017) காலை 8 மணி தொடக்கம் 9.30 மணிவரை பாடசாலை வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கணித பாட ஆசிரியரின் இடமாற்றத்தினை தடை செய், கல்வி எங்கள் எதிர்காலம் சிதைக்காதே , கல்வி வலயமே பதில் கூறு, வேண்டும் வேண்டும் எங்கள் கணித பாட ஆசிரியர் என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு சுமார் 90 நிமிடங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட இடத்திற்கு விரைந்த வவுனியா வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ( ஓமந்தை ) சசிகுமார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடி ஆசிரியரின் இடமாற்றத்தினை இரத்து செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தார்.

அதனையடுத்து மாணவர்கள் கற்றல் நடவடிக்கைளுக்காக பாடசாலைக்குள் சென்றனர்.