வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்தடை!!

273

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் பட்டானிசூரிலிருந்து நெளுக்குளம் ஊடாக இராஜேந்திர குளம் வரை, ஒமேகா லைன், அரசன் அரிசி ஆலை, சியாம் அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, கயன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.