வவுனியா மேல் நீதிமன்றத்தால் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு!!

748

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நேற்று மூவருக்கு மரண தண்டனை வழங்கி வவுனியா மேல் நிதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளம் கப்பாச்சி பகுதியில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த மொஹமட் மிஹால்துவன் ஏக்கீன் என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டிற்காக செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த வீரையா ரவீந்திர ஜோதி, நேசராசா மறுபெயர் ராஜி, குமார் ஆகிய மூவருமே இவ்வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டனர்.

2016ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 2ஆம் திகதி இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் மூன்று எதிரிகளுக்கு எதிராகவும் குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கானது 2ஆம் மற்றும் 3ஆம் எதிரிகள் இன்றிய விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த 2ஆம் மற்றும் 3ஆம் எதிரிகளுக்கு ஏற்கனவே வவுனியா மேல் நிதிமன்றத்ததால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு தீர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து 1ஆம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளமையால் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

வுழக்கு தொடுநர் தரப்பில் வழக்கை அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தியிருந்தார்.