நீரில் அடித்து செல்லப்பட்ட மேலுமொரு சிறுமியின் சடலம் மீட்பு!!

592

 
மாத்தளையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்து காணாமல்போயிருந்த மூன்று சிறுமிகளில் இருவரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை காணாமல் போயிருந்த மூன்று சிறுமிகளில் ஒருவரின் சடலம், சம்பவ இடத்திலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய இரு சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இன்னுமொரு சிறுமியின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

தற்பொழுது எஞ்சியுள்ள ஒரு சிறுமியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமற் போனவர்களின் பெயர்கள் கிங்சிலி ரத்நாயக்க (வயது 40) சந்திராகாந்தி (வயது 59), வினுக்கி ரத்நாயக்க (வயது 13), ஹிருனி ரத்நாயக்க (வயது 4), ரவிந்திர லசந்த (வயது 39), ருவனி டில்ருக்ஷி (வயது 38) ரிஷாதி வீகிஷா (வயது 12), சந்துனி (வயது 12).