வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

685

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று(06.11.2017) முற்பகல் 11.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு இ.போ.ச பேருந்தில் 4 கிலோ 350 கிராம் கேரள கஞ்சாவினை எடுத்து வந்த நபரை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாகவும் கஞ்சாவினை எடுத்து வந்த யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 55 வயதுடைய அப்பு அரியரத்தினம் என்பவரை விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.