யாழில் பல நாட்களாகத் துன்பங்களை அனுபவித்து வரும் தாயாரொருவர் கண்ணீருடன் புலம்பல்!!

571

 
யாழில் கடந்த புதன்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழையால் வீட்டின் சமையலறைக்குள்ளும், அடுப்புக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்திருப்பதால் அன்றாடச் சமையல் வேலைகளில் ஈடுபடாத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தாயாரொருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கூலி வேலை செய்து பிள்ளைகள் வழங்கும் சிறுதொகைப் பணத்தில் உணவு வாங்கி உண்கின்றோம். வீட்டுக்குள் வெள்ளம் புகுந்திருப்பதால் நிம்மதியாக உறங்கவும் வழியின்றித் தவிர்த்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மழைப் பாதிப்பால் பல நாட்களாகத் துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில் இதுவரை எங்களைக் கிராம சேவையாளரோ அல்லது அரச அதிகாரிகளோ, அரசியல் வாதிகளோ வந்து பார்வையிடவில்லை.

யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு யாழ்.வலி வடக்கிலிருந்து யாழிலுள்ள பல்வேறு முகாம்களிலும் வாழ்ந்து வரும் மக்கள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாகப் பாதிக்கப்பட்டடனர்.

குறிப்பாக மல்லாகம் கோணாப்புலம் முகாமைச் சூழ வெள்ள நீர் தேங்கிக் காணப்படுவதுடன் சில வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

இதன் காரணமாக இந்த முகாம் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் குறித்த முகாமில் அமைந்துள்ள வீடொன்று மழை வெள்ளநீரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. பாதிப்புத் தொடர்பில் குறித்த வீட்டைச் சேர்ந்த குடும்பப் பெண்ணான பெண்மணியிடம் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு கவலை வெளியிடடுள்ளார்.

எனது கணவர் மீன் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதிகாலை வேளை தொழிலுக்குச் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார்.

இதனால், என் கணவர் முன்னரைப் போன்று தற்போது தினமும் தொழிலிலுக்குச் செல்வதில்லை. இதன் காரணமாக எமது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எங்களைச் சொந்தவிடத்தில் குடியமர அனுமதித்தால் நாங்கள் துன்பங்களை அனுபவிக்க வேண்டியதில்லை. இராணுவம் எங்கள் காணிகளை மீண்டும் விடுவிக்காத காரணத்தால் தான் நாங்கள் முகாம்களில் அவல வாழ்க்கை வாழ வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகத் தான் கடந்த 27 வருட காலத்திற்கும் மேலாகத் துன்பத்துக்கும் மேல் துன்பம் அனுபவித்து வருகிறோம்.

வருடம் தோறும் மாரி காலத்தில் நாங்கள் மழை வெள்ளத்தால் அவதிப்பட்டு வருகிறோம் எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாக வேண்டி ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.