காதலை தெரிவித்த இளைஞருக்கு நேர்ந்த கதி!!

837

நீரோடையொன்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் வித்தியாசமாக காதலை தெரிவித்த இளைஞரை அண்மையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் பிபிலை பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிபிலையைச் சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞர் அந்த பெண்ணிடம் வித்தியாசமாக காதலை தெரிவிப்பதாக கூறி தகாத முறையில் நடந்து கொண்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இளைஞர் மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 1500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், தண்டப்பணம் செலுத்தாவிடின் ஒரு மாத கடூழிய சிறை தண்டனையை ஏற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், 10000 ரூபா வந்திப் பணமும் செலுத்துமாறும் பிபிலை மஜிஸ்திரேட் நதீரா போகாஹாதெனிய உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.