தாயை உயிரோடு தீவைத்து எரித்த மகள்: அதிர்ச்சிக் காரணம்!!

357

பாக்கியலட்சுமி தனது மகள் கற்பகஜோதியுடன் (21) வசித்து வருகிறார். கற்பகஜோதி தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்த நிலையில் உடன் பணிபுரியும் ஒருவருடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது.

இது பாக்கியலட்சுமிக்கு தெரியவந்ததும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்துள்ள நிலையில் இது சம்மந்தமாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்ட நிலையில் தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் தாயாரை கொலை செய்ய கற்பகஜோதி துணிந்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்த மண்ணெய்யை எடுத்து தாயாரின் மீது ஊற்றி தீவைத்துள்ளார்.

உடல் கருகிய பாக்கியலட்சுமி கூச்சல் எழுப்ப, அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், புகாரின் பேரில் பொலிசார் கற்பகஜோதியை கைது செய்துள்ளனர்.