பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க பணியாளர்கள் அறிவிப்பு!!

840

பல்வேறு கோரிக்கைகனை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்க பணியாளர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் பி.என்.பி.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

நாளை நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு தொடரும் எனஅவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் தாம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தபோது தமது பிரச்சினைகளுக்கு இரண்டு வாரங்களில் தீர்வை பெற்றுக்கொடுப்பதாக போக்குவரத்து துறை பிரதி அமைச்சர் வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.