வவுனியா வேப்பங்குளம் பகுதியிலுள்ள மயானத்தை அண்டியுள்ள குளத்தில் குப்பை கொட்டுவதற்கு நேற்று (06.11) மாலை 5.30 மணியளவில் கப் ரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டபோது அப்பகுதியிலுள்ள மக்களின் எதிர்ப்பையடுத்து பொலிசார் தலையிட்டு வாகனத்தையும், சாரதியையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா வேப்பங்குளம் தட்சணாங்குளம் மயானத்தை அண்டிய குளத்தில் கப் ரக வாகனத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு எடுத்துவரப்பட்டபோது அப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் தடுத்து நிறுத்தி பொலிசாரை வரவளைத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் வாகனத்தின் சாரதியைக் கைது செய்ததுடன் வாகனத்தையும் மேலதிக விசாரணைகளுக்காக பண்டாரிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பல பொதுமக்கள் வசித்து வருகின்றதுடன் இரவு வேளைகளில் சிலர் அப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டுச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.







