பேருந்தில் யுவதிகள் மூவர் செய்த காரியம்!!

1136

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் யுவதிகள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பண்டாரவளையிலிருந்து பதுளைக்கு சென்ற அரச பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்தே 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய, குறித்த யுவதிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். அழகியவன்ன தெரிவித்துள்ளார்.