மன்னார் – வங்காலை பகுதி கடலில் விசித்திரமான பாரிய மீன் சிக்கியுள்ளது. குறித்த மீன் நேற்று முன் தினம் பிடிக்கபட்டுள்ளது.
சுறாவை ஒத்த தோற்றமுள்ள மீன் ஒன்று மீனவர்களின் வலையில் வீழ்ந்துள்ளது. அத்துடன், மீனை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் அதனை பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகின்றது.
மேலும், இந்த மீனை பார்வையிட நூற்றுக் கணக்கான மக்கள் திரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.







