பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரனின் பணிநயப்பு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் (12.11.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 யாழ் இணுவில் மத்திய கல்லூரி மண்டபத்தில் பேராதனை பல்கலைக்கழக தகைசார் பேராசிரியர் கலாகீர்த்தி சி.தில்லைநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் பிரதம விருந்தினர்களாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் திருமதி பவானி விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினர்களாக இந்திய துணைத்தூதர் ஆ.நடரா ஶ்ரீமதி சாந்தி நடராஜா கலந்து சிற்ப்பிக்கவுள்ளனர்
இந்நிகழ்வில் விழா ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் கலாநிதி க.ஶ்ரீகணேசன் வரவேற்புரையினை நிகழ்த்த ஆசியுரையினை சிவஶ்ரீ சோ.பிரசன்னா குருக்களும் தகைசார் பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயரும் கலாநிதி ஆறு.திருமுருகனும் நிகழ்த்துவர்.
வாழ்த்துரையினை தகைசார் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பேராசிரியர் மா.வேதநாதன் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் பேராசிரியர் க.தேவராஜா யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் வலிகாமம் வலய கல்விபணிப்பாளர் செ.சந்திரராஜா இணுவில் மத்திய கல்லூரி அதிபர் இ.துரைசிங்கம் கொழும்பு தமிழ்சங்கத்தலைவர் தம்புசிவசுப்பிரமணியம் ஆகியோர் நிகழ்த்துவர்
அதனைத்தொடர்ந்து பணிநயப்பு மலர் வெளியீடு நிகழ்வு இடம் பெறும் வெளியீட்டுரையினை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா நிகழ்த்துவார்.
அதனைத்தொடர்ந்து பேராசிரியர் வ.மகேஸ்வரன் எழுதிய பெரியதும் சிறியதும் நூல் வெளியீடு இடம்பெறும் நூலின் நயவுரையினை பேராசிரியர் கி.விசாகரூபன் நிகழ்த்துவார் அதனைத்தொடர்ந்து சிறப்புரை பிரதம விருந்தினர் ஏற்புரை என்பவற்றை தொடர்ந்து விழா ஏற்பாட்டு குழுவின் செயலாளர் மு.கௌரிகாந்தின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெறும்.






