மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை!!

1234

தனது மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று மதவாச்சிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த பின்னர் மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

43 வயதுடைய மனைவி மற்றும் 45 வயதுடைய கணவன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில். சம்பவம் தொடர்பில் மதவாச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.