போலியான செய்திகளையும் அவதூறு பிரச்சாரங்களையும் மேற்கொள்ளும் இணையத்தளங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்தித்த ஒர் சந்தர்ப்பத்தில் இது குறித்து ஜனாதிபதியிடம் கோரியதாக சுகாதார அமைச்சுர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அவதூறு பிரச்சாரம் மற்றும் போலி செய்திகளை வெளியிடும் ஒரு சிலரை தண்டித்தால், சீரிய ஒழுக்கமுடைய ஊடக கலாச்சாரத்தை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத் தளங்களில் வெளியாகும் ஆபாச வார்த்தைகளை பார்த்துவிட்டு சிறுவர்கள் அது குறித்து பெரியவர்களிடம் கேட்கும் போது, பெரியவர்கள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.






