வவுனியா இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான ஒன்று கூடல் நேற்று (08.11.2017) பழைய மாணவர் து.நிரோஷன் தலைமையில் நடைபெற்றது.
பழைய மாணவர்களின் ஒன்று கூடலுக்கு வவுனியா இந்துக் கல்லூரியின் அதிபர் திரு.பூலோகசிங்கம் அவர்களும், முன்னைய இந்துக் கல்லூரியின் அதிபர் திரு.சிவஞானம் மற்றும் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இவ் ஒன்றுகூடலில் பாடசாலை அபிவிருத்தி தொடர்பாகவும், மற்றும் பழைய மாணவர்களின் புதிய அங்கத்துவத்தில் இணைவது தொடர்பாகவும், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புணரமைப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.














