விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவ (STEM Subjects) பாடங்களை கற்பிப்பதற்கான முறைமை மாற்றியமைக்கப்படும் என்று வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவைக்கேற்றவாறு பாடத்திட்டத்தினை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடன் மாணவர்களுக்கு கணித உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் கணித ஆய்வு கூடங்களும் தரமுயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சுகாதார காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மகாபொல புலமைப் பரிசில் திட்டத்திற்கான தகைமைபெறு குடும்ப வருமான எல்லையினை ஆண்டொன்றுக்கு ரூபா 300,000 இலிருந்து ரூபா 500,000 ஆக அதிகரிப்பதுடன், இதன் மூலம் மேலதிகமாக 3,000 மாணவர்கள் நன்மையடைவர் என்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.






