வவுனியாவில் முன்னாள் சுகாதார அமைச்சரால் பொது அமைப்புகளுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!!

495

 
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் மாகாண பிரமாண அடிப்படையிலான குறித்தொதுக்கப்பட்ட நிதியில் கொள்ளவனவு செய்யப்பட்ட தளபாடங்கள் பொது அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் (08.11.2017) வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மருதோடை பெண்கள் கிராம அபிவிருத்திச்சங்கம், கோவில்புளியங்குளம் கிராம அபிவிருத்திச்சங்கம், ஊஞ்சால்கட்டி கமக்காரர் அமைப்பு என்பவற்றிற்கு தளபாடங்கள் முன்னாள் அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் இணைப்புச்செயலாளர் சஜீவன், இலங்கை தமிழரசுக்கட்சியின் வடக்கு பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.