பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!!

497

அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார்.

நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லொறியொன்று பொலிஸாரின் கட்டளையை மீறிச்சென்றதையடுத்து பொலிஸாருக்கும் அந்தக் குழுவுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார்.