குழியில் விழுந்து 12 வயது சிறுவன் பலி!!

403

மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற வகையில் வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெலியத்த – கிரிந்த பிரதேசத்தை சேர்ந்த சேஹான் என்ற 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பெலியத்த – கிரிந்த பிரதான வீதிக்கு அருகில் குழி ஆழமாக வெட்டப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அந்த குழி நீரில் மூழ்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் இருந்த வேளை காணாமல்போனதாக தெரிவிக்கப்படுகிறது
இந்நிலையில், சிறுவனை காணாத நிலையில் பாட்டி பிரதேசவாசிகளுடன் இணைந்து அவரை தேடியபோது, சிறுவன் குழியில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு, பிரதே பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.