தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

540

தொலைத்தொடர்பாடல் கோபுரங்களுடன் இணைக்கப்படும் அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் 2 ரூபா வரையில் புதிய வரி அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

கையடக்க தொலைபேசி கோபுர திட்டங்களை ஊக்கப்படுத்தாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை பொலீத்தின் உற்பத்தியை ஊக்கப்படுத்த கூடாதென்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அதற்காக ஒரு கிலோ பொலத்தீனுக்கு 10 ரூபாய் வரி அறிவிடப்படவுள்ளதாக வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.