உழவு இயந்திர சில்லுக்குள் சிக்கி இளைஞன் பலி!!

696

 
திருகோணமலை – சேறுநுவர, உடப்புக்கேணி பகுதியில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் சில்லுக்குள் சிக்குண்டு இளைஞரொருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சேறுநுவர பொலிஸார் கூறியுள்ளனர்.

உழவு இயந்திரத்தை கழுவுவதற்காக தண்ணீர் காணப்பட்ட இடத்திற்குள் இறக்கியுள்ள நிலையில், உழவு இயந்திரம் புரண்ட போது சில்லுக்குள் சிக்குண்டடு இளைஞன் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் ஈச்சிலம்பற்று – விநாயகபுரம் பகுதியை சேர்ந்த சிறிகாந் சுரேன் (18வயது) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் உயிரிழந்த இளைஞர் இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு, பரீட்சை முடிவுகளுக்காக காத்திருந்தவர் எனவும், இலக்கியம் மற்றும் தொழில்துறைகளில் சிறந்த ஆர்வம் உள்ளவர் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த இளைஞனின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.