மனைவியின் நடத்தையில் சந்தேகம் : கணவர் செய்த அதிர்ச்சி செயல்!!

289

 
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரத்தை சேர்ந்தவர் சஞ்சய் குமார். இவர் மனைவி ஷோபா சர்மா (44). தம்பதிக்கு காஜல் (19), கிரண் (18) மற்றும் ஆஷிமா (17) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் ஆஷிமா மட்டும் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

குடிப்பழக்கம் கொண்ட சஞ்சய்குமார் தினமும் குடித்துவிட்டு வந்து ஷோபாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றும் கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சஞ்சய்குமார் ஷோபாவை இரண்டு கத்தியை கொண்டு உடல் முழுவதும் குத்தியுள்ளார்.

இதை தடுக்க முயன்ற ஆஷிமா கையிலும் கத்தியால் குத்தியுள்ளார். வலியால் துடித்த ஷோபாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஷோபாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த ஆஷிமாவுக்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து சஞ்சய்குமார் ஜலந்தர் காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.