கொய்யாப்பழம் பறிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!!

567

 
திம்புள்ளை, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை தோட்டத்தில் கொய்யாப்பழம் பறிக்கச் சென்ற 6 வயது சிறுவன் போகாவத்தை ஓயாவில் இருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

போகாவத்தை தோட்டத்தைச் சேர்ந்த, தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய ராஜேந்திரகுமார் அஸ்வின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 5 மணிமுதலில் இருந்து சிறுவனை வீட்டில் காணாததால் உறவினர்களும், தோட்ட மக்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர், இதன்போது குறித்த சிறுவன் வீட்டின் அருகில் உள்ள போகாவத்தை ஓயாவில் சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.