வவுனியா மறவன்குளத்தில் 1.51 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார திட்டங்கள்!!

265

 
சமுர்த்தி திணைக்கத்தின் நிதியுதவியுடன் மக்களின் பங்களிப்பிலும் ஆரமபிக்கப்பட்ட 1.51 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார திட்டத்தை நேற்று முன்தினம் (10.11.2017) அன்று வவுனியா மாவட்ட சமுர்த்தி திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சனால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

வலுப்படுத்தும் குடும்பங்களுக்கான வாழ்வாதார வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா ஈச்சங்குளம் கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட மறவன்குளம் கிராமத்தை சேர்ந்த 9 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

சமுர்த்தி உத்தியோகத்தர் ம.ரமேசால் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வேலைதிட்டத்தில் உணவகம் 1, அரைக்கும் ஆலை 1, புகைபட பிரதி கடை 1, துவிசக்கர வண்டி திருத்தும் கடை 2, மூன்று பேருக்கு பால்மாடுகள் வீட்டுத்திட்டம் 1 அடங்குகின்றது.

இன் நிகழ்வில் தலைமைபீட முகாமையாளர் திருமதி சந்திரகுமார் முகாமையாளர் செல்வி ஜானகி உத்தியோகத்தர்களான திரு.யூடிக்குமார், ம.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.