வவுனியாவில் பெண்கள் வாழ்வில் வளமூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்துவைப்பு!!

598

 
வவுனியாவில் பெண்கள் வாழ்வில் வளமூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (12.11.2017) மாலை 4.30 மணியளவில் சாளம்மைக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.

இச் செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, பிரதேச சபை உறுப்பினர், கிராம சேவையாளர், பொதுமக்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தினால் (கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு) ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் நிதியில் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.