பதுளை, கந்தகெட்டிய புதுகேகந்த கிராமத்தில் மதிய உணவுடன் உட்கொண்ட காளான் விஷமானதால், மூன்று பேர் கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டில் முளைத்திருந்ததாக கூறப்படும் காளான் வகை ஒன்றை பிடிங்கி சென்று மதிய உணவுக்காக சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்டு சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் இரத்த வாந்தி வர ஆரம்பித்துள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். நோயாளிகளுள் சிறு பிள்ளையும் இருப்பதாக வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளனர்






