வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

340

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (13.11.2017) மதியம் 1.30 மணியளவில் 2 கிலோ 155 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து மொனறாகலை நோக்கி இ.போ.ச பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் பயணப்பொதியினை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து சோதனையிட்ட சமயத்தில் 2கிலோ155கிராம் கேரளா கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னினைப்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.