யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 10 கிலோ 23 கிராம் கேராள கஞ்சாவினை இ.போ.ச பேரூந்தில் கடத்த முற்பட்ட சந்தேக நபரோருவரை நேற்று (18.11.2017) அதிகாலை 12.15 மணியளில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுராட்சி தலைமையிலான பொலிஸார் மத்திய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திடமாக நின்ற யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்த 33 வயது நபரின் பயணப்பொதியினை சோதனையிட்ட சமயத்தில் 10 கிலோ 23 கிராம் கேராள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.









