வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!!

276

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (18.11.2017) காலை 9.30 மணியளவில் 2.கிலோ 32 கிராம் கேரள கஞ்சாவுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவிலிருந்து புத்தளம் நோக்கி இ.போ.ச பேரூந்தில் 2 கிலோ 32 கிராம் கேரள கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்து கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து முல்லைத்தீவு, முள்ளியவலையைச் சேர்ந்த 42 வயதுப் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.