வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற மென்பந்து சுற்றுபோட்டி!!

275

 
வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (18.11) நியூ பேர்ட்ஸ் கழகத்தினர் முதன் முறையாக நடாத்தும் அணிக்கு ஏழு பேர் கொண்ட 6 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கழக உறுப்பினர்களின் தலமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர் ரதீபன், செயலாளர் மிதுலன், வவுனியா மாவட்ட பாடசாலை மட்டத்திலான உதைபந்தாட்ட சம்மேளன தலைவரும் ஆசிரியருமான சுந்தராங்கன், ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்ப நிகழ்வை சிறப்பித்திருந்தனர்

இதேவேளை இச்சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26.11.2017)  சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.