வவுனியா மாவட்ட முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழரசு கட்சியினருக்கும் இடையே விஷேட சந்திப்பு!!

832

 
வவுனியாவில் நேற்று (19.11) மாலை 4.30 மணியளவில் பட்டாணிச்சூர், மன்னார் வீதியிலுள்ள வெங்கடேஸ்வரா மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கும் வவுனியா மாவட்ட முஸ்லிம்களுக்கும் இடையே விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில் வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடமாகணசபை உறுப்பினருமாக மருத்துவர் ப.சத்தியலிங்கம், வவனியா மாவட்ட கட்சி உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுமூகமான ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் தமிழ்மக்கள் முஸ்லிம் மக்களிடையே ஒரு நல்லுறவைக்கட்டியெழுப்பும் முதற்திட்டமாகவும் இச்சந்திப்பு இடம்பெற்றது.