ஆவா குழுவின் முக்கிய நபருக்கு ஒன்றரை வருட கடூழிய சிறைத்தண்டனை!!

520

ஆவா குழுவின் முக்கிய நபர் என கூறப்படும் ஒருவருக்கு ஒன்றரை வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் சந்தேகநபர் நேற்று (21) ஆஜர்படுத்தப்பட்டார்.
வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இந்த சந்தேகநபர் கடந்த வௌ்ளிக்கிழமை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் மீள கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கடுமையாக எச்சரித்த நீதவான் ஒன்றரை வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.கோப்பாய் பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சக்திவேல்நாதன் நிசாந்தன் விக்டர் என்பவருக்கே கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.