வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட இருவர் படுகாயம்!!

1095

 
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (22.11.2017) இரவு 7.45 மணியளவில் மோட்டார் சைக்கில் மோதி குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

புகையிரத நிலைய வீதியூடாக குருமன்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மதுரா மண்டபத்திற்கு முன்பாக வீதியினருகே நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளாது.

இவ் விபத்தில் குறித்த பெண்ணும் ஒரு வயதுக் குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிலின் சாரதியான 21வயதுடைய இளைஞனை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.