வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை!!

1026

 
வவுனியாவில் 50 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது குடும்தத்தினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

கடந்த (20.11.2017) அன்று காலை 11 மணியளவில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த 50 வயதான பெனடிக் சூசைநாதன் என்பவர் வெளியில் சென்றதாகவும் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் உறவினர்கள் நன்பர்களின் வீடுகளுக்கும் தொடர்புகொண்டு கேட்டபோது அங்கும் அவர் இல்லாத காரணத்தினால் குடும்பத்தினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்

இவர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அவரின் மகனான பிரியதர்ஷனை ‎0765288183 என்னும் இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுகொண்டனர்.