இவ் வருடம் ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் நூற்றுக்கு 8.0 வீதம் வரை அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நூற்றுக்கு 5 வீதமாக நாட்டின் பணவீக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, உணவு வகைகள் சார்ந்த பணவீக்கம் நூற்றுக்கு 6.4 வீதமாகவும் உணவு வகைகள் சாராத பொருட்களின் பணவீக்கம் நூற்றுக்கு 2.4 வீதமாகவும் காணப்படுவதாக, சனத் தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேங்காய், மரக்கறி, அரிசி, வாழை, சிவப்பு வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தமையே, உணவு வகைகள் சார்ந்த பணவீக்கத்திற்குக் காரணம் எனவும் அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.






