மோடியின் கழுத்தை அறுத்து, கையை வெட்ட மக்கள் காத்திருப்பு!!

628

பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியாக திகழும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட கடந்த 12 ஆம் திகதி மனுக்கள் பெறப்பட்டது. இதில், தற்போதைய தலைவராக உள்ள முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், தலைவர் பதவிக்கு லல்லு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக உள்கட்சி தேர்தல் அதிகாரி நேற்று அறிவித்தார்.

பத்தாவது முறையாக தன்னை தலைவராக தேர்வு செய்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து பேசிய லல்லு பிரசாத் என்னை ஜெயிலில் தள்ளி விட வேண்டும் என்று அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயாராக காத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய லல்லுவின் மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி பிரதமர் நரேந்திர மோடியின் கழுத்தை அறுக்கவும் கையை வெட்டவும் பீகார் மக்கள் தயாராக உள்ளதாக கூறினார்.

பிரதமர் மோடியை குற்றம்சாட்டி அவருக்கு எதிராக விரலை நீட்டுபவர்களின் விரல்களையும், கையையும் சேர்த்து வெட்ட வேண்டும் முன்னர் பீகார் மாநில பா.ஜ.க. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நித்யானந்த ராய் தெரிவித்த கருத்துக்கு பதிலடி தரும் வகையில் பேசிய ரப்ரி தேவி, மோடியை குற்றம்சாட்டி விரலை நீட்டுபவர்களின் கையை வெட்ட வேண்டும் என்பதா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

அப்படி செய்து பாருங்கள், நாட்டில் யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள். பீகார் மக்கள் எதுவும் கூற மாட்டார்களா? பிரதமர் நரேந்திர மோடியின் கழுத்தை அறுக்கவும் கையை வெட்டவும் பீகாரில் பல மக்கள் தயாராக உள்ளனர். இதற்காக மக்களை அவர்கள் சிறையில் தள்ளலாம். பீகார் மக்கள் ஒன்றாக சேர்ந்து சிறைக்கு செல்வார்கள்.

எங்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை கண்டு நான் அஞ்ச மாட்டேன். அமலாக்கத்துறை ஆகட்டும், வருமான வரித்துறை ஆகட்டும், சி.பி.ஐ. ஆகட்டும், மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடத்தை என்னவென்று எனக்கு தெரியும். இவற்றை வைத்து என்னை வீழ்த்திவிட முடியாது.

எத்தனை நோட்டீஸ்களை வேண்டுமானாலும் அவர்கள் அனுப்பட்டும். இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. நாங்கள் என்ன தவறு செய்தோம்? என்பதை மத்திய அரசும் இங்குள்ள மாநில அரசும் தெரிவிக்க வேண்டும். என்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று விரும்பினால் பாட்னாவுக்கு வந்து என்னிடம் கேள்வி கேட்கட்டும் என்றும் அவர் கூறினார்.