யாழ். கோண்டாவில் பழனியாண்டவர் கோவிலடியை அண்மித்த பகுதியில் உள்ள கிணற்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும், சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொது மக்களின் உதவியை எதிர்ப்பார்த்திருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலத்தில் இளம் சிவப்பு நிறத்தை ஒத்த நிறத்தில் சேர்ட்டும் கறுப்பு நிறத்திலான ஜீன்ஸ்ம் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக சடலம் கிணற்றுக்குள் காணப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.






