நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெளிகம்பொல கிராமத்தில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர்.
விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் நீர் பாய்ச்சுவதற்கு இன்று காலை 10 மணியளவில் சென்ற போதே மரத்தடியில் மலைப்பாம்பை கண்டுள்ளார். இதனையடுத்து பிரதேசவாசிகள் பாம்பை மடக்கி பிடித்துள்ளனர்.
அண்மைக்காலமாக வளர்ப்பு நாய்கள் காணமல் போன நிலையிலே இந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.








