குவைத்தில் தற்கொலை செய்த இலங்கையரின் உடற்பாகங்கள் மாயம்!!

668
A palm

 

குவைத் நாட்டில் தற்கொலை செய்து உயிரிழந்தவரின் சடலம் 4 மாதங்களின் பின்னர் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரது உடலில் பல பாகங்கள் காணவில்லை எனவும், தற்போதைக்கு மீதமாக உள்ள பாகங்களை சோதனையிடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்தெனிய பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான ஹரிகல பிரதேசத்தை சேர்ந்த உபாலி என்ற 52 வயதுடைய நபரே இவ்வாறு குவைத் நாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த ஜுலை மாதம் முதலாம் திகதி உயிரிழந்தவரின் சடலம் இலங்கை கொண்டு வந்தவுடன் புதைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளமையினால் விசாரணை மேற்கொள்ளுமாறு உயிரிழந்தவரின் சகோதரர் கேகாலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளர்.

அதற்கமைய நேற்று முன்தினம் அவரது உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட போது அவரது உடலில் பல பாகங்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.