சென்னை தனியார் கல்லூரியில் பிஇ முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி மவுனிகா, தேர்வில் கொப்பி அடித்த காரணத்தால் பேராசியர் அவரை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மவுனிகா, நான் தற்கொலை செய்யப்போகிறேன் என தனது சகோதரனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு விடுதி அறையின் மின்விசிறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மவுனிகாவும் இவரது சகோதரன் ராகேஷ் ரெட்டியும் இரட்டையர்கள் ஆவார். தனது சகோதரன் மீது அதிக பாசம் கொண்ட மவுனிகா, I Love You…..I’ll Miss You So Much என எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை ராஜாரெட்டி கூறியதாது, என் மகள் தற்கொலை பற்றி கல்லூரி நிர்வாகம் எங்களுக்குத் தகவல் சொல்லவில்லை, எனது மகள் ஹால் டிக்கெட்டை கல்லூரி நிர்வாகத்தினர் கிழித்து எறிந்தனர். கல்லூரியின் தவறான நடவடிக்கையால் எனது மகளை இழந்துவிட்டேன்.
இனிமேலாவது கல்லூரி மாணவர்களை துன்புறுத்தாதீர்கள். என் மகள் தவறு செய்திருந்தால் என்னிடம் தெரிவித்திருக்கலாம். அவளுக்கு இளவயது அவள் தவறு செய்திருந்தால் அவர்களே கவுன்சிலிங் கொடுத்திருக்கலாம். ஒவ்வொருவரும் தவறு செய்துள்ளனர்.
இளவயது சிந்தனையின் வேகத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்கும் வயது. இன்று என் மகளை இழந்துவிட்டேன், கல்லூரி நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.






