மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

281

மூன்று குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தையையும், தாய்மாமாவையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. குருஷேத்ரா என்ற பகுதியில் கடந்த வாரம் சமீர் (11) சிம்ரன் (8) மற்றும் சமர் (5) என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காணாமல் போனார்கள்.

இது குறித்து குழந்தைகளின் தாய் அளித்த புகாரின் பேரின் பொலிசார் அங்கிருக்கும் காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

பொலிசாருடன் சேர்ந்து குழந்தைகளின் தந்தை சோனு மாலிக், தாய் மாமன் ஜெகதீப் மாலிக் மற்றும் ஊர்காரர்களும் தீவிரமாக தேடி இருக்கின்றனர்.

அப்போது சோனு மற்றும் ஜெகதீப் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர்களிடம் விசாரித்தனர்.
முதலில் பேச மறுத்த இருவரும் பின்னர் மூன்று குழந்தைகளையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றதை ஒப்பு கொண்டனர்.

தன் குழந்தைகளை கொலை செய்வதற்கு சோனு பல காலமாக திட்டமிட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சோனு மற்றும் ஜெகதீப்பை பொலிசார் கைது செய்தனர்.

குழந்தைகளின் தாத்தா ஜித்தா மாலிக் கூறுகையில், சோனுவுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. மூன்று குழந்தைகள் நலனுக்காக கள்ளத்தொடர்பை விட்டு விடும் படி குடும்பத்தார் அவரிடம் கோரினோம்.

ஆனால் அதை மீறி அந்த பெண்ணுக்காக குழந்தைகளை சோனு கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் இதுதான் கொலைக்கான காரணம் என்பதை கூற மறுத்த பொலிஸ் இந்த விடயத்தில் மெளனம் காக்கிறது.